அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அர்ச்சகர் பெயரில் பல லட்சம் மோசடி !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திருச்சி,  ஸ்ரீரங்கம் கோயில் அர்ச்சகரின் செல்போனை ஹேக் செய்து பல லட்ச ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறனர்.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் அர்ச்சகர் சுந்தர்பட்டர். அர்ச்சகராக இருப்பதால் இவருக்கு முக்கிய அரசியல் தலை வர்கள், தொழிலதிபர்கள் என பலருடன் தொடர்பு உள்ளது. இதில் அவருடைய செல்போன் என்னும் பலருக்கு அறிமுகமானது. இந்நிலையில், அவருடைய செல்போன் என்னை ஹேக் செய்த மர்ம நபர்கள், அந்த எண்ணில் இருந்து சுந்தர்பட்டர் குறுஞ்செய்தி அனுப்புவது போல வாட்ஸ் அப்பில் இருந்து பலருக்கு பணம் கேட்டு குறுஞ்செய்தி அனுப்பி உள்ளனர்.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

“மிக அவசரம் உடனடியாக ரூ.60 ஆயிரம் பணம் தேவைப்படுகிறது உடனடியாக அனுப்பி வைக்கவும்” என சுந்தர் பட்டர் கேட்பது போல  அவருடைய எண்ணிலி ருந்து வாட்ஸ்ஆப் மெசேஜ் சென்றுள்ளது. இதனை பார்த்த சுந்தர் பட்டரின் நண்பர்கள் சிலர் அவரை கேட்காமலேயே சுமார் 1 லட்சம் ரூபாய் வரை அவருடைய அக்கவுண்ட் எண்ணுக்கு பணம் அனுப்பி உள்ளனர்.

இதில் சந்தேகமடைந்த சிலர் சுந்தர் பட்டரை தொடர்புகொண்டு பேசிய போதுதான் பல லட்சம் ரூபாய் வரை மோசடி சம்பவம் நடந்துள்ளது. தெரியவந்தது. இதுதொ டர்பாக திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசில் சுந்தர்பட்டர் நேற்று புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.