பூதலூரில் தேசியக்கொடி ஏந்தி மாபெரும் பேரணி !
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூரில் 27.05.2025 காலை 10:30 மணி அளவில் பூதலூர் தெற்கு ஒன்றிய பிஜேபி சார்பில் அதன் தலைவர் விவேக் அவர்கள் தலைமையில் மாநில பிரச்சார பிரிவு இணைக்க செயலாளர் ராஜகோபால் அவர்கள் முன்னிலையில்,
பூதலூர் ஒன்றிய பொதுச் செயலாளர் ரவிவர்மா இளைஞரணி தலைவர் கார்த்திக் பாரதிராஜா காமத்திக்குமார் தங்க கார்த்திக் ஆகியவர்கள் கலந்து கொண்ட மிகப்பெரிய தேசியக்கொடி ஏந்தி இராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மிகப்பெரிய பேரணி நடைபெற்றது.
பேரணி பூதலூர் நான்கு ரோடு ஆரம்பித்து ரயிலடி வழியாக மீண்டும் அதே இடத்திற்கு வந்து சேர்ந்தது. பூதலூர் காவல் நிலைய ஆய்வாளர் அவர்கள் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மிக சிறப்பான முறையில் செய்யப்பட்டிருந்தது.
— தஞ்சை க. நடராஜன்.