நியோமேக்ஸ் வழக்கில் புதிய எஸ்.பி.!
நியோமேக்ஸ் வழக்கில் புதிய எஸ்.பி.!
மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவில் நியோமேக்ஸ் தொடர்பான வழக்குகளை கவனிப்பதற்கென்றே, சிறப்பு விசாரணை அதிகாரியாக டி.எஸ்.பி. மணீஷா செயல்பட்டு வருகிறார். இப்பணியை மேற்பார்வையிடும் பொறுப்பிலிருந்த எஸ்.பி.தங்கையா விடுவிக்கப்பட்ட நிலையில், தற்போது புதிய எஸ்.பி.யாக கலைச்செல்வன் ஐ.பி.எஸ். நியமிக்கப்பட்டிருக்கிறார்.
![எஸ்.பி. கலைச்செல்வன்](https://angusam.com/wp-content/uploads/2023/10/addsf-205x300.jpg)
2012-இல் காவல் பணியில் காலெடுத்து வைத்த கலைச்செல்வன், திருச்சி திருவெறும்பூர் டி.எஸ்.பி., தருமபுரி, நீலகிரி மாவட்ட எஸ்.பி., சென்னை வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர், சென்னை போதை பொருள் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு காவல் கண்காணிப்பாளர், இறுதியாக போலீஸ் குற்ற ஆவணக்காப்பக பிரிவிலிருந்து பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு மாறுதலாகி வந்திருக்கிறார்.
– வே.தினகரன், ஷாகுல், படங்கள் – ஆனந்த்
எங்கள் WhatsApp சேனலில் இணைந்திடுங்கள்..