திருச்சியில் வேதியியல் பொருட்கள் விற்பனை கூடங்களில் போலீஸ் திடீர் சோதனை!!!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சியில் பல்வேறு குற்ற சம்பவங்களை தடுக்கும் விதத்தில்  வேதியல் கடைகளில் விற்கப்படும் எத்தனால் மற்றும் மெத்தனால் சட்ட விரோதமாக விற்கப்படுகிறதா என்று திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவுப்படி திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் வடக்கு திரு. சிபின் ips  அவர்களின் அறிவுரையின்படியும்

அங்குசம் டிவி கண்டு களியுங்கள்..

போலீஸ் திடீர் சோதனைதிருச்சி மாநகர மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. பாலகிருஷ்ணன் மற்றும் திருச்சி மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் திரு. கண்ணன் ஆகியோர் தலைமையிலான போலீசார் திருச்சி மாநகரப் தில்லை நகர் பகுதிகளில் செயல்பட்டுவரும் வேதியியல் மற்றும் சர்ஜிக்கல் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு நேரில் சென்று திடீர் ஆய்வினை மேற்கொண்டனர்.

Kauvery Cancer Institute App

போலீஸ் திடீர் சோதனைஇந்த ஆய்வின்போது அந்நிறுவனங்களில் மெத்தனால் மற்றும் எத்தனால் ஆகிய பொருட்களை சட்டவிரோத விற்பனை ஏதும் நடைபெறுகிறதா? மற்றும் மெத்தனால் இருப்பு ஏதேனும் உள்ளதா? என்று ஆய்வு செய்தனர். பின்னர் அந்நிறுவன உரிமையாளர்களிடம் மெத்தனால் மற்றும் எத்தனால் சட்டவிரோதமாக விற்பவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்கள் மீது உரிய சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கப்பட்டனர். மெத்தனால் கள்ள சாராயத்தில் பயன்படுத்தும் போது கண் பார்வை இழப்பு மற்றும் கல்லீரல் செயலிழப்பு  நச்சுத்தன்மை அதிகம் இருப்பதால் உயிரே போகும்  அபாயம் ஏற்படும். மேலும், அந்நிறுவனங்களில் விற்பனை செய்யப்படும் வேதிபொருட்களுக்கும் உரிய உரிமம் பெற்றபிறகே விற்பனை செய்யப்படவேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.