காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும்; முறையாக போராடி நீரைப் பெற முயற்சிக்காத த.வெ.க. அரசை கண்டித்தும் தஞ்சையில் திமுக சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் சர்ச்சைக்குரிய முறையில் பேசியதாக, அதிரடியாக கைது செய்யப்பட்ட சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதிலும் குறிப்பாக இந்த விவகாரத்தில், தேவையில்லாமல் திரிஷா பெயரை இழுத்துவிட்டதாக சொல்லப்படும் நிலையில், மதுரையில் “தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட முதல் சங்கம்” என்ற அடைமொழியோடு திரிஷா நற்பணி மன்றத்தை தொடங்கியிருப்பதாக போஸ்டர் அடித்து ஒட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அதுவும், மதுரை மீனாட்சி தாய் ஆசிர்வாதத்தால் என தொடங்கி வீரமங்கை வேலுநாச்சியாரோடு திரிஷாவை ஒப்பிட்டு அரசியலுக்கு வர வேண்டுமென்ற வேண்டுகோளோடு திரிஷா நற்பணி மன்றத்தினர் ஒட்டியுள்ள போஸ்டர்கள் மதுரையை மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர வைத்திருக்கிறது.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.






Comments are closed, but trackbacks and pingbacks are open.