கடற்கரை காற்று – தஞ்சை ஹேமலதா
🌹🌹🌹🌹
கடற்கரை காற்று
🌹🌹🌹🌹
சுண்டலும் சம்சாவும்
சூடாக விற்கும்
சிறுவன்
பட்டினியாய் !
தோளில் சுமக்கும்
புத்தகங்களை
புத்தியில்
ஒருநாள்
விடுமுறை
இது குடும்பத்தின்
சூழ்நிலை.
கடற்கரை காற்று
கவிதையின்
பாட்டு…
வயதான பெரியவர்
வயதாகாத இதயத்தால்
முறுக்கான கடமையில்
முறுக்கு விற்பனை
முதியவா் வறுமை !
கூட்டம் கூட்டமாய்
காதல் பூக்களின்
அன்பு வாசம்….
வெளியே வந்தால்
சாதிகள் பேசும்
மரணத்தை வீசும்.
கடற்கரை காற்று
பல
விஷயங்கள் பேசும்…
💐💐💐
— தஞ்சை ஹேமலதா.