திருச்சியில் எழுத்தாற்றல் மற்றும் தொடர்பியல் பயிலரங்கம்!

0

திருச்சியில் எழுத்தாற்றல் மற்றும் தொடர்பியல் பயிலரங்கம்!

இளம் எழுத்தாளர்களை பயிற்றுவித்து உருவாக்கும் வகையில், எழுத்தாற்றல் மற்றும் தொடர்பியல் பயிலரங்கை திருச்சிராப்பள்ளி தமிழ் இலக்கியக் கழகமும் தனிநாயகம் இதழியல் கல்லூரியும் இணைந்து நடத்தின.

3 நாள் நிகழ்வாக நடைபெற்ற இப்பயிலரங்கில், பல்வேறு தளங்களில் இயங்கும் தமிழ்ச்செல்வன், முனைவர் பாலின் ப்ரீத்தாஜெபசெல்வி, இரா.தமிழ்தாசன், தோழர் தமிழ்பித்தன், தோழர் திருவைக்குமரன், அமிர்தா, இயக்குநர் மௌரி, தோழர் பாட்டாளி ,நந்தவனம் சந்திரசேகரன் உள்ளிட்ட ஆளுமைகள் பங்கேற்று பயிற்சி வகுப்புகளை நடத்தினர்.

4 bismi svs

தமிழ் இலக்கிய கழகத்தின் அருள் முனைவர் ஆ.ஜோசப், சே.ச.மற்றும் திருச்சி புனிதவளனார் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் ஜா.சலேத் ஆகியோரின் முன்னெ டுப்பில் நடை பெற்ற இப்பயிலரங்கில், பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

- Advertisement -

- Advertisement -

இறுதிநாள் நிகழ்வில், ”பத்திரிகையாளர் அனுபவமும், நுட்பமும்” என்ற தலைப்பில், அங்குசம் இதழின் நிர்வாக ஆசிரியர் ஜெ.டி.ஆர். பங்கேற்று பத்திரிகையாளனாக கால் நூற்றாண்டு காலம் கடந்து வந்த பாதையை மாணவர்களோடு கலந்துரையாடினார்.

– அங்குசம் செய்திப் பிரிவு

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.