நியோமேக்ஸ் தலைமை அலுவலகத்தை திறக்க அனுமதி ! அட்வகேட் கமிஷனர்கள் நியமனம் ! சாதகம் பாதகம் என்ன ?

3
neomax
neomax

நியோமேக்ஸ் தலைமை அலுவலகத்தை திறக்க அனுமதி ! அட்வகேட் கமிஷனர்கள் நியமனம் ! சாதகம் பாதகம் என்ன ? நியோமேக்ஸ் வழக்கில் அவசர பணிகளுக்காக தலைமை அலுவலகத்தை திறக்க அனுமதிப்பது மற்றும் புகார்தாரர்களுடன் செட்டில்மென்ட் குறித்து பேசுவதற்கு Advocate Commissioner களை நியமிப்பது தொடர்பாக நியோமேக்ஸ் நிர்வாகத்தரப்பில் தொடரப்பட்ட வழக்கில், நிபந்தனைகள் அடிப்படையில் அலுவலகத்தை திறக்க அனுமதித்தும் 10 Advocate Commissioner களை நியமித்துக் கொள்ள அனுமதித்தும் தீர்ப்பளித்திருக்கிறது, TANPID சிறப்பு நீதிமன்றம்.

இந்த விவகாரம் தொடர்பாக, சேர்ந்த நியோமேக்சால் பாதிக்கப்பட்டவர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கம்பம் R. இளங்கோவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “Compounding of offences U/s 5(a) of TANPID நீதிமன்றம் Approval பண்ணிய பின்புதானே நியோமேக்ஸ் நிறுவனம் தன்னுடைய Businesses-ஐ மேற்கொண்டு தொடர முடியம். அந்த சட்டம் வலியுறுத்துகிறது. அதற்கு பின்புதானே DTCP Approval க்காக மனுச் செய்தல் போன்ற வேலைகளை தொடர முடீயும். அப்படியிருக்கும் போது இப்போதே நியோமேக்ஸ் நிறுவன அலுவலகத்தை திறந்து வைக்க அனுமதி கொடுத்தால் சடட்த்தின் சந்து பொந்துகளையெல்லாம் நியோமேக்ஸ் ஆராயும்.

- Advertisement -

- Advertisement -

தங்களிடமுள்ள பினாமி (இயக்குநர்களின் சொந்த பெயரில்) சொத்துக்களை ஒவ்வொன்றாக அவரவர் மனைவி, மக்கள் பெயருக்கு மாற்றி விடுவார்களே! DRO கையில் சாவியை கொடுத்து அலுவலகத்தை திறந்து வைத்து மாலையில் அவரே பூட்டினாலும் இடைப்பட்ட வேளையில் நியோமேக்ஸ் எவ்வளவோ தில்லுமுல்லு செய்துவிட முடியும். ஆகவே, இடையீட்டு மனுதாரர்களும் புகார்தாரர்களும் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

Copounding of Offences U/s 5(A) of TANPID Act-ன் படி DRO மூலம் முதலீட்டாளர்களுக்கு நிலத்தைப் பிரித்துக் கொடுக்கிறோம் நியோமேக்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளது. அச்சட்டத்தின் ஷரத்துக்களை ஆராய்வோம். அனைத்து டெபாசிட்தாரர்களுக்கும் முழுமையான செட்டில் மென்ட் செய்த பின்னர் தான் நீதிமன்றத்தால் இது ஏற்றுக் கொள்ளப்படும்.

NeoMax_ad
NeoMax_ad

அதாவது

1) முதலில் புகார் தாரர் அனைவருக்கும் செட்டில்மென்ட் செய்திருக்க வேண்டும். இதை நிறைவேற்றும் வகையில் EOW போலிசாரால் அடையாளம் கண்டுள்ள 76.58 கோடி மதிப்பிலான சொத்துக்களின் பட்டியலை ஏற்கெனவே நீதமன்றம் ஆணையிட்டுள்ளபடி மார்ச் 4-ம் தேதிக்குள் கெஜட்டில் பதிவு செய்து அந்த அறிக்கையை 5-ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அவைகள் DTCP அங்கிகாரம் பெற்றவையாக இருக்கலாம். ஆனால் இந்த சொத்துக்கள் அனைத்தும் காட்டிலும், மேட்டிலும், ஓடையிலும், கிடங்கிலும் நியோமேக்ஸ் வாங்கிப் போட்ட உதவாக்கரை நிலங்கள் என ஏற்கெனவே செய்திகள் லந்துவிட்டன. தரமான நிலங்கள்யாவும் பினாமி பெயரில் வாங்கப்பட்டு ரகசியமாக பாதுகாப்பாக வைக்கப்பட்டுளளன.

4 bismi svs

2) நிறுவனதின் மேல் வேறு எந்த புதிய புகாரும் இருக்கக் கூடாது. இது எவ்வாறு சாத்தியம்?. EOWக்கு புகார்கள் வந்து குவிந்து கொண்டு இருக்கின்றனவே. நீதிமன்றம் ஒரு காலக்கெடு விதித்து புகாரை நிறுத்தலாம் இதுவும் சாத்தியமா?

3) புகார்தாரர்கள் அனைவருக்கும் பிரித்துக் கொடுத்த பின்பு நிறுவனத்தின் மீதமுள்ள சொத்துக்கள் புகார் தெரிவிக்காத டெபாசிட்தாரர்களுக்கும் செலுத்தப்பட போதுமானதாக உள்ளது என்பதை நீதிமன்றத்தில் நிருபிக்க வேண்டும். நிறுவனத்தின் பெயரிலுள்ள மிகக்குறைவான சொத்துக்களுக்கு ஏற்றாற்படி முதலீட்டாளர் பட்டியலை (32800) தயார் செய்து, நியோ மேக்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. இதை நிறைவேற்றிவிடும்.

புகார் கொடுக்காதவர்கள் (93%) எல்லாம் நியோமேக்ஸ் நிறுவனத்தின் விசுவாசிகளாக இருப்பதாக கூறிக் கொள்கிறார்களே! அதனால் அவர்கள் எல்லாம் இந்த புள்ளி விபரங்களைப் பற்றி ஆராய்வதுமில்லை. அவர்கள் கதி எப்படியோ ஆகட்டும். புகார் கொடுக்காதவர்கள் நிறைய பேர் என்னுடன் தொடர்புகொண்டு அவர்களின் நிலை என்னவாகும் என கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் கூறும் பதில் ஏஜண்டுகளையே இது நான்கு மறை தீர்ப்பு நம்புங்கள். நம்பினார் கைவிடப்படுவதில்லை. என்பதாகும்.

மேற்கண்ட அனைத்தும் நிறைவேற்றப்பட்ட பின்புதான் Compounding of offences u/s. 5(a) of TANPID Act-ஐ நீதிமன்றம் நடைமுறைப்படுத்தும். அதற்கு பின்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாமல் மறைக்கப்பட்ட முதலீட்டாளர்களை வைத்து, பினாமி சொத்துக்களைப் பயன்படுத்தி நியோ மேக்ஸ் Business செய்யும்??? அது அவர்கள் பாடு!. Asset and Liability இரண்டுமே மறைக்கப்பட்டவைகள்தான். மீண்டும் புகார்தாரர்களின் பிரச்சனைக்கு வருவோம். புகார்தாரர்களுக்குப் பிரித்துக் கொடுப்பதற்கு EOW attach பண்ணவிருக்கும் சொத்துக்கள் பெரும்பாலும் உதவாக்கரை நிலங்களாகத்தான் இருக்கும். ஏனெனில் அவைகளைப் பற்றி ஏற்கனவே செய்திகள் வெளிவந்து விட்டன.

புகார்தாரர்கள் இந்த உதவாக்கரை நிலங்களை DRO மூலம் வாங்கிச் செல்வதா? கூடாது. தரமான நிலங்கள் பினாமி பெயரில் (இயக்குநர்களின் சொந்த பெயரில்) நிறையவே ஆங்காங்கே உள்ளன. ஆகவே, அவரவர் மாவட்டத்திலுள்ள அனைத்து பினாமி நிலங்களையும் கண்டறிந்து EOW மூலம் நீதிமன்றத்திற்கு காட்டிக் கொடுக்க வேண்டும். Attach பண்ண வேண்டும். அப்போது நமக்குத் தோதுவான தரமான இடங்களை DROவிடமிருந்து பிரித்து வாங்க வாய்ப்பு ஏற்படும். பினாமி நிலங்களை எல்லாம் EOW கண்டுபிடித்துக் கொள்ளும் என மெத்தனமாக இருந்து விடக் கூடாது. இது நடக்கவே நடக்காது.

நம்மில் நம்மிடையே இருப்பர். துடிதுடிப்புடன் மெனக்கெட்டு அவர்கள் புகார் கொடுத்த செயல்படக்கூடியவர்கள் பலர் புத்திசாலித்தனமாகச் சிறப்பாக செயல்பட்டால் இந்த பினாமி நிலங்களைக் கண்டு பிடிக்க முடியும். அவ்வாறு மெனக்கெட்டு செயல்படுபவர்களுக்கு DRO நிலத்தை பிரித்துக் கொடுக்கும் சமயத்தில் சில சிறப்புச் சலுகைகளை நாம் தர வேண்டும். இடத்தைப் பிரிக்கும் போது, அவர்கள் விரும்பும் இடத்தைக் கொடுத்து விட வேண்டும். ஏனெனில் உழைத்தவர்களல்லவா? இந்த எண்ணம் எல்லோருக்கும் வர வேண்டும். அப்போது தான் அவர்கள் இப்பணிக்கு முன்வருவர். நம் எல்லோருக்கும் நல்ல பலன் கிடைக்கும். பினாமி நிலங்களைக் கண்டறியும் வழிமுறைகளை தெரிந்து கொள்ள தொடர்பு கொள்ளுங்கள். 8870967051 அல்லது 6380588260 (வாட்ஸ் அப்) R. இளங்கோவன், M.Sc., M.Ed., PGDYN கம்பம், ஒருங்கிணைப்பாளர், நியோமேக்சால் பாதிக்கப்பட்டோர் சங்கம்.

நியோமேக்ஸ் குறித்து அங்குசம் செய்தி வெளியிட்ட அட்டை பட கட்டுரைகள்.
நியோமேக்ஸ் குறித்து அங்குசம் செய்தி வெளியிட்ட அட்டை பட கட்டுரைகள்.

பணம்தான் வேண்டும். நிலம் வேண்டாம் என திடமாக இருக்கும் புகார் கொடுத்த முதலீட்டாளர்களே வணக்கம். உங்கள் கொள்கையில் நியாயம் இருக்கிறது. நிலமானால் நியோமேக்ஸ் நிறுவனம் வாங்கிப் போட்ட உதவாக்கரை நிலம்தான் கிடைக்கும் என்கிறீர்கள். அதற்கான தீர்வை மேலே சொல்லியிருக்கிறேன். படித்துப் பாருங்கள். கவனமாக வாங்குவோமே ஏன் பணம்தான் வேண்டும் என்று கேட்டு என்பவர்களுக்கு, கீழே உள்ள சிக்கலைப் படித்துப் பாருங்கள். நீதிமன்றத்தின் மூலம் Compounding of offences U/s. 5(A) of TANPID நடைமுறைப்படுத்தும் போது என்ன சிக்கல் என்றால், “புகார்தாரர்கள் தங்களது செட்டில்மெண்ட் பணமாகத் தரப்பட வேண்டும் என்று கோரினால், அதற்கான சட்ட வழிமுறைகள் கடைப்படிக்கப்பட்டு, (அதாவது சொத்துக்களை ஏலம் விட்டு) செட்டில்மெண்ட் செய்ய அதிக காலம் எடுக்கும்”.

ஆகவே, தரமான பினாமி நிலங்களை கண்டுபிடித்து, நீதிமன்றத்தில் காட்டிக் கொடுத்தால் DRO மூலம் அந்த தரமான நிலத்தைப் பிரித்து வாங்கலாம். கூட்டாக விற்றுக் கொள்ள முடியும். யோசியுங்கள்! ஒத்துழையுங்கள்! முயற்சி செய்வோம்! வெற்றி பெறுவோம்!” என்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

– அங்குசம் செய்திப்பிரிவு.

 

5 national kavi
3 Comments
  1. நரேந்திரன் says

    பணத்திற்காக பொய் செய்திகளை பரப்பி மக்களை ஏமாற்றி பணம் பறிக்க நினைக்கும் விபச்சார புரோக்கர் ஊடகம் அங்குசம்

  2. Mahi says

    எல்லோருக்கும் செட்டில்மெண்ட் செய்ய விரும்பும் Neomax ஐ விட்டுவிட்டு அங்குசம் மாதிரி சகுனி வேலை பார்க்கும் உன்னை யாரும் நம்ப மாட்டார்கள்.பள்ளிக்கூடம்,மருத்துவமனை எல்லாம் ஓடைக்குள்ளேயா கட்டியிருக்கிறார்கள்?நீ யாருக்காக வேலை பார்க்கிறாய்,நீ என்ன எதிர்பார்க்கிறாய் என்று கொஞ்ச நாளில் தெரிந்துவிடும்.அப்புறம் இருக்குடா உனக்கு ஆப்பு..கொய்யால…

  3. CLARANCE PHILIP says

    I hope I will get my money soon. I purchased Nellai Pattinam flat nearly 2400sqft and Rs: 2400000 Lakhs and koilpattai flat Rs: 1200000 Lakhs.

Leave A Reply

Your email address will not be published.