”தீபாவளி” பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசுக் கடை வைப்போருக்கு அறிவிப்பு !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சிராப்பள்ளி மாவட்டம், எதிர்வரும் 31.10.2024 அன்று கொண்டாடப்பட உள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வெடிபொருள் சட்டம் 1884 மற்றும் எரிபொருள் விதிகள் 2008-இன் கீழ் ஊரகப் பகுதிகளில் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோர் விதி எண்.84-இல் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின்படி இணையதளம் வழியாக மட்டும் 24.10.2024-ற்குள் விண்ணப்பிக்குமாறு செய்தி வெளியிடப்பட்டது.

தற்போது அரசிடமிருந்து வரப்பெற்ற செய்தி வெளியீட்டில், 19.10.2024-ற்குள் மட்டுமே இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் எனவும், அதன் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதால்,

Kauvery Cancer Institute App

பட்டாசுக் கடை
பட்டாசுக் கடை

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு விற்பனைக்கடை அமைக்க உரிமம் கோரும் விண்ணப்பங்களை19.10.2024-க்குள் மட்டுமே இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். அதன்பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாதுஎனத் தெரிவிக்கப்படுகிறது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

அங்குசம் டிவி கண்டு களியுங்கள்..

மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப்குமார்,இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்துள்ளார்.

 

செய்தி வெளியீடு

உதவி இயக்குநர்,

செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,

திருச்சிராப்பள்ளி.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.