மயிலாடுதுறை இரயில் பயணிகள் சார்பில் கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் !
மயிலாடுதுறை இரயில் பயணிகள் சார்பில் கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் !
மயிலாடுதுறை இரயில் பயணிகள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 28.07.2024ஆம் நாள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அவர்கள் முன் வைத்த கோரிக்கைகள்
மயிலாடுதுறையிலிருந்து சென்னைக்கு செல்ல நேரடி ரயில்களை உடனே இயக்கவேண்டும். காலையில் மயிலாடுதுறையிலிருந்து சேலம் செல்லும் ரயிலில் 8 பெட்டிகளை மட்டுமே உள்ளன.

அதில் 4 பெட்டிகளில் கழிவறை வசதிகள் இல்லை. இன்னும் கூடுதலாய் இரயில் பெட்டிகள் இணைக்கப்பட வேண்டும். எல்லா பெட்டிகளிலும் கழிவறை வசதி கொண்டதாக இருக்கவேண்டும்.
தஞ்சையிலிருந்து சென்னை செல்லும் உழவன் எக்ஸ்பிரஸில் மக்கள் நலன் கருதி கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட வேண்டும். காரைக்குடி – மயிலாடுதுறை ரயிலை மீண்டும் இயக்கப்பட வேண்டும்.
கடலூர் வரை நீடிக்கப்பட்டுள்ள மைசூர் எக்ஸ்பிரஸ்-இல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட வேண்டும்.
சமூக நோக்கத்தோடு கூடிய இந்த ஆர்ப்பாட்டத்திற்கு 150 -க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர். மயிலாடுதுறையின் உள்ளூர் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டு போராட்டத்தைச் சிறப்பித்தனர்.
– சிறப்பு செய்தியாளர்