துறையூர் அருகே மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்! டிரைவர் கைது !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சி மாவட்டம் துறையூர் திருச்சி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே அனுமதி இன்றி மணல் கடத்தி வருவதாக வெங்கடேசபுரம் கிராம நிர்வாக அதிகாரிக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்  விரைந்து சென்று பார்த்த பொழுது அனுமதி இன்றி 4 டன் மணல் கடத்தி வந்த லாரி பிடித்து துறையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.   கிராம நிர்வாக அதிகாரி சுந்தர்ராஜன் கொடுத்த புகாரின் பேரில்  போலீசார் வழக்கு பதிவு செய்து மணல்  கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை பறிமுதல் செய்தனர்.

மணல் கடத்தல்
மணல் கடத்தல்

Kauvery Cancer Institute App

அங்குசம் டிவி கண்டு களியுங்கள்..

மேலும், மணல் கடத்தி வந்த லாரி ஓட்டுநர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஜான் என்பவர் மகன் பிரசாந்த் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய லாரி கிளீனர் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவரை வலை வீசி தேடி வருகின்றனர்.

 

—  ஜோஷ்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.