NAAC அங்கீகாரம் இழந்த பல்கலை… ஆறு பேருக்கு மெமோ… சர்ச்சையில் உயர்கல்வித்துறை !
கடந்த வாரம் தமிழக கல்லூரி கல்வி ஆணையாளரின் செயல்பாடுகள் குறித்து அங்குசம் இதழில், “திமுக ஆட்சியில் ஜெ.வாக வலம் வரும் அதிகாரி சர்ச்சையில் 3 பல்கலைக்கழகங்கள்..!

என்கிற தலைப்பில் செய்தி வெளியிட்டு இருந்தோம். அதன் மூலம் இன்று 05.06.2025 பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு திடீர் விசிட் அடித்த கல்லூரி கல்வி ஆணையாளர் சுந்தரவல்லி ஐ.ஏ.எஸ்., யாரைக் கேட்டு பத்திரிகைகளுக்கு செய்தி கொடுத்தீர்கள் என்று அலுவலக உதவியாளர்கள் மற்றும் தேர்வு பிரிவு அலுவலர்களை மிரட்டியதுடன், லட்சுமணன், உஷாராணி, ரவி, ஏழுமலை, அஞ்சலை விஜயா ஆகிய ஆறு பேருக்கு சரியாக வேலை செய்யவில்லை என காரணம் காட்டி மெமோ கொடுத்துவிட்டு சென்றுள்ளார் அந்த அதிகாரி. இதனால் பல்கலைக்கழக பேராசிரியர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.