கார் மெக்கானிக் ஷெட்டில் மது பாட்டில்கள் பறிமுதல்.. மாநகரப் போலீஸ் அதிரடி..

0

கார் மெக்கானிக் ஷெட்டில் மது பாட்டில்கள் பறிமுதல்.. மாநகரப் போலீஸ் அதிரடி..


திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவுப்படி, ஊரடங்கு அமலில் உள்ளபோது டாஸ்மாக் மூடப்பட்டுள்ள நிலையில் மது பாட்டில்களைக் கள்ளச்சந்தையில் விற்பனைச் செய்வதை தடுக்க அமலாக்க பிரிவு ஆய்வாளர் சுதா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று 13.05.2021 முதலியார் சத்திரம் அருகில் கள்ளச்சந்தையில் மது பாட்டில்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அங்கு விற்பனை செய்த முதலியார் சத்திரத்தை சேர்ந்த முத்துக்குமார் பாலக்கரையைச் சேர்ந்த காளிமுத்து ஆகியோரைக் கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் ரூ.2,15,000/- மதிப்புள்ள 1780 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டு மேற்படி இருவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சிறப்பாக செயல்பட்டு எதிரிகள் மீது வழக்கு பதிவு செய்து அமலாக்கப்பிரிவு தனிப்படைக் குழுவினரை திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

-ஜித்தன்

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.