குழந்தை பெற்று ,2 வது நாளில் தேர்வு எழுதிய ; 23 வயது பழங்குடி பெண் நீதிபதி ஆனார் !

0

குழந்தை பெற்று ,2 வது நாளில் தேர்வு எழுதிய ; 23 வயது பழங்குடி பெண் நீதிபதி ஆனார் ! ஜவ்வாது மலை பழங்குடியினப் பெண் நீதிபதியாக தேர்வாகியுள்ளது அனைவரின் புருவத்தை உயர்த்தி உள்ளது திருவண்ணாமலை மாவட்டம்  ஜவ்வாது மலையைச் சேர்ந்தவர் ஸ்ரீபதி (23). இவர் ஏலகிரி மலை டான் போஸ்கோ கல்லூரியில் கல்விக்கற்று  பின்னர் பி.ஏ, பி.எல் சட்டப்படிப்பை முடித்தார்
படித்துக்கொண்டிருக்கும் போதே இவருக்கு திருமணம் ஆகிவிட்டது

இந்த நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி சிவில்  தேர்வுக்கு தயாராகி வந்த ஸ்ரீபதி’க்கு  பிரசவ தேதியும், தேர்வு தேதியும் ஒரே நாளில் வந்ததால் அதிர்ச்சி அடைந்தார். அதிர்ஷ்ட வசமாக தேர்வுக்கு முந்தைய நாளில் ஸ்ரீபதிக்கு பிரசவமாகி குழந்தை பிறந்தது.

ஸ்ரீபதி
ஸ்ரீபதி

குழந்தை பிறந்தாலும், தேர்வு எழுதுவதில் உறுதியாக இருந்த ஸ்ரீபதி தனது கணவர் மற்றும் நண்பர்கள் உதவியுடன் பிரசவம் ஆன 2-வது நாளிலே காரில் பயணம் செய்து சிவில் தேர்வு எழுதியுள்ளார்.  சமீபத்தில் வெளியான டிஎன்பிஎஸ்சி  தேர்வு முடிவில் ஸ்ரீபதி சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ளார். இதன் மூலம் ஜவ்வாது மலையில்  நீதிபதியாக தேர்வாகியுள்ள முதல் பழங்குடியின பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இது குறித்து ஐவ்வாது மலையில் பணியாற்றும் அரசுப் பள்ளி ஆசிரியை மகாலட்சுமி என்பவர் ஸ்ரீபதி’ யை பாராட்டி தனது சமூகவளைதளப் பக்கத்தில் பகிர்ந்த பதிவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

“பழங்குடியினர் பிரிவில் முதல் பெண் சிவில் நீதிபதி,  ஸ்ரீபதி  ஜவ்வாதுமலையில் பிறந்து, ஏலகிரி மலையில் கல்வி கற்று, பி.ஏ.பி.எல் சட்டப்படிப்பை முடித்து, படிப்பின் இடையில் மணமானாலும் இடைநின்று போகாமல் படித்து முடித்தவர். இன்று மலையும், மாவட்டமும், தெரிந்தவர்கள் அனைவரும் ஸ்ரீபதியைப் பாராட்டிப் போற்றிக் கொண்டிருப்பதற்குக் காரணம் அவருடைய வயதா(23),அவருடைய இனமா, அவர் வெற்றியடைந்திருக்கும் துறையா? மூன்றுமே எனலாம். ஆனால் நான் உண்மையிலேயே அதிர்ச்சியில் மூர்ச்சையாயிருந்தேன். இந்தத் தகவலைக் கேட்டபோது, ஸ்ரீபதிக்குத் தேர்வு வரும் தேதியிலேயேதான் பிரசவ தேதியும் கொடுக்கப்பட்டிருந்தது.தேர்வுக்கு இரண்டுநாட்கள் முன் குழந்தையும் பிறந்துவிட்டது. தேர்வைக் கண்டிப்பாக எழுதவேண்டும் என்று தீவிரமாக இருந்தார்.” என்றார்

ஸ்ரீபதி
ஸ்ரீபதி

அதோடு “மருத்துவரின் ஆலோசனைப்படி வேறெப்படி பத்திரமாக போகமுடியும் என்று கேட்டுவிட்டு முடிவெடுக்குமாறு நம் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் பரமுவிடம் மட்டும் கூறியிருந்தேன்.”(பரமு,ஸ்ரீபதி இணையரின் நண்பர்&ஒரே ஊர்). மற்றபடி அவர் சென்றாரா இல்லையா என்றுகூட கேட்கவில்லை. யார் வேண்டுமானாலும் ஆலோசனை கூறலாம். ஆனால் எடுத்து செயல்படுத்துவதில்தானே எல்லாமே இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய் செலவு செய்து, வெறும் காரை, பாதுகாப்பான, சொகுசு காராக மாற்றி ஸ்ரீபதி தேர்வுக்குச் சென்னை சென்றார். தேர்வு எழுதினார். இதோ வெற்றி வாகையும் சூடியிருக்கிறார். உண்மையாகவே நினைத்துப்பார்த்தால் “ஏய் …எப்புட்றா?” என்று சொல்வதற்குமுன் தொண்டைக்குழிக்குள் திக்.. திக்.. அடிக்கிறது.இரத்தம் சொட்ட சொட்ட எப்படித்தான் ஸ்ரீபதி இதை எதிர்கொண்டாரோ என்று. அதைவிட பெருமைப்படவும், பாராட்டப்படவும் வேண்டிய நபர் வெங்கட்ராமன், ஸ்ரீபதியின் இணையர். புள்ளதான் முக்கியமென்று சொல்லி, தடைகல்லாக நிற்கும் ஆண்களுக்கு மத்தியில் அவர் ஸ்ரீபதியின் இறக்கைகளில் பாராசூட் பொருத்திவிட்டவர் போன்று தெரிகிறார்.”

4 bismi svs
23 வயது பழங்குடி பெண் நீதிபதி ஸ்ரீபதி
23 வயது பழங்குடி பெண் நீதிபதி ஸ்ரீபதி

திருமணம் முடிந்து ஸ்ரீபதி அந்த ஊரில் நடக்கும்  ஒரு கிராம சபையில் பங்கேற்று,கிராம வளர்ச்சித் தொடர்பாக பல கேள்விகளை அடுக்கியுள்ளார்.எல்லோரையும் போல அரசியல் புள்ளிகள் “இதுக எல்லாம் படிச்சி என்னத்த கிழிக்கப் போவுதுங்கனு நாங்களும் பார்க்கிறோம்” என்று எகத்தாளமாக முதுகுக்குப்புறம் பேசியவர்களுக்கு முன்னாள் இதோ வெற்றியும் கண்டுள்ளார்.
இனி யாருக்கு வயிற்றில் புளிக் கரைத்துக்கொண்டிருக்கிறது என்றுதான் தெரியவில்லை.

Anyway….. யார் சொன்னால் எல்லோருக்கும் கேட்குமோ அந்த இடத்திற்கு எங்கள் வலியைத் தெரிந்த,உணர்ந்த,புரிந்த ஒருவர் சென்றிருப்பது அவ்வளவு நிம்மதியாகவும் பெருமையாகவும் பக்கபலமாகவும் உள்ளது. தமிழ்வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை என்று ஆனை பிறப்பித்த எங்கள்  முதல்வர் M. K. Stalin க்கு!*  என பாராட்டியுள்ளார்

திருமணமாகியும்  இளம்வயதில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரசவத்துக்கு அடுத்தநாள் ஜவ்வாது மலையில் இருந்து சென்னை வரை சென்று தேர்வெழுதி வென்றும் காட்டிய பழங்குடியினப் பெண்ணின் கதை, கேட்போரை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

பழங்குடி இளைஞர் செந்தில் குமார்
பழங்குடி இளைஞர் செந்தில் குமார்

முன்னதாக ! திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை நெல்லி வாசல் நாடு அருகில் உள்ள மேல்பட்டு கிராமத்தை சேர்ந்த பழங்குடி இளைஞர் S. செந்தில்குமார் அவர்கள் தர்மபுரி உதவி ஆட்சியராக  பயிற்சி முடித்து 12.02.2024 நேற்று நீலகிரி மாவட்டம் கூடலூர் கோட்டத்தில் வருவாய் கோட்டாட்சியராக (RDO)பணியினை ஏற்றுக் கொண்டார்.

எளியவர்களின் நம்பிக்கைகளில் கல்வியும் முதன்மையானதாக்கிய பழங்குடி சகோதரன் ,சகோதரிக்கு அங்குசம் செய்தியின்  வாழ்த்துக்கள்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.