அரசுத் துறை சார்ந்த பணிக்கு ஏன் தனியார் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுகிறது ? எவ்வளவு பெரிய ஆபத்து !

0
பள்ளிக்கல்வி துறையின் சார்பாக “Academic Support Associate” பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது ZIGMA TECHNOLOGIES என்ற தனியார் நிறுவனம்.
Contact என்று பிரசாத் பூமிநாதன் என்பவருடைய பள்ளிக்கல்வித்துறை மெயில் id “prasad.b@tnschools.gov.in” கொடுக்கப்பட்டுள்ளது.
மொத்தம் எத்தனை பணியிடங்கள், எந்த மாதிரியான வேலை என்பது குறித்த தெளிவான விவரங்கள் இல்லை. கொடுத்த விவரங்களைப் வைத்துப்பார்த்தால் இது பள்ளிகல்வித்துறையின் dataவை கையாளும் பணியாக இருக்கவேண்டும்.
இது அரசுப்பணியா, அரசுக்காக தனியாரிடம் சம்பளம் வாங்கப்போகும் பணியா, தேர்வு செய்யப்படுபவர்கள் யாரிடம் report செய்வார்கள்?
- Advertisement -

- Advertisement -

ZIGMA TECHNOLOGIES உடன் பள்ளிக்கல்வித்துறை ஏதும் MoU / ஒப்பந்தம் செய்துள்ளதா? இந்நிறுவனத்தின் எந்த சேவைகளை பள்ளிக்கல்வித்துறை பயன்படுத்திக்கொள்ளப் போகிறது? கல்வித்துறை சார்ந்தவர்கள் / ஆசிரியர்கள் / ஊடக நண்பர்கள் யாரிடமேனும் இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்புகள் ஏதும் இருந்தால் பகிர்ந்து உதவுங்கள்.
அந்த நிறுவனம் !
அந்த நிறுவனம் !
அரசுத் துறை சார்ந்த பணிக்கு ஏன் தனியார் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுகிறது? சரி, ஒப்பந்தப்படி தனியார் நிறுவனம் தான் recruitment முதல் முழு பணியையும் மேற்கொள்கிறது என்றால், ஏன் தொடர்புக்கு பள்ளிகல்வித்துறையின் மின்னஞ்சல் முகவரி?
4 bismi svs
பல்லாயிரம் கோடி புழங்கும் மெட்ரோ பணிகளுக்கே கூட, இன்னின்ன நிறுவனங்கள் டெண்டரில் பங்கெடுத்தன, இந்த நிறுவனம் தேர்வுசெய்யப்பட்டுள்ளது என்று செய்தி வெளியிடும் அரசு இந்த மாதிரி பணிகளுக்கான process-ஐ மூடி மறைப்பது ஏன்?  எல்லாவற்றுக்கும் மேலாக, ஜனவரி 30ம் தேதி வரை deadline இருக்கும்போது application linkஐ தங்கள் இஷ்டத்திற்கு close செய்து open செய்பவர்கள் யார்? பள்ளிக்கல்வி துறை இந்த மாதிரி திரைமறைவு வேலைகள் பார்ப்பது இது முதல் தடவை அல்ல.
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் இதே போல்  Madhi Foundation விரித்த வலையில் சிக்கி TN Education Fellowship என்று ஒரு திட்டம் கொண்டுவந்தார்கள். ஒன்றிய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு சாமரம் வீசிக்கொண்டிருக்கும் இந்த நிறுவனம், தமிழ்நாடு அரசின் எந்த விதிமுறைக்கும் கட்டுப்படாமல் recruitment நடத்தி இத்திட்டத்திற்கு Senior மற்றும் Junior Fellowsஐ தேர்வு செய்தது. Fellows தேர்வாகி பயிற்சிக்கு செல்லும் வரை திட்டத்திற்கு பின்னால் Madhi Foundation என்ற என்.ஜி.ஓ. இருப்பதே அவர்களுக்கு தெரியவில்லை.
இப்படி ஒரு திட்டம் தொடங்கப்பட்டிருப்பது பற்றியோ, பயிற்சி முடித்து Fellows மாவட்டங்களுக்கு அனுப்பப்படுவது பற்றியோ மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கே தெளிவான தகவல் சென்று சேரவில்லை. சரியான தகவல் பரிமாற்றம் இல்லாமல் மாவட்டங்களுக்கு சென்ற Fellowsஐ CEOக்கள் தங்கள் அலுவலகத்திற்கு உள்ளேயே விடாமல் வெளியே நிறுத்தி வைத்த கூத்துக்கள் எல்லாம் நடந்திருப்பது பெரும்பாலான ஆசிரியர்களுக்கு கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை.Fellowsக்கும் தாங்கள் என்ன பணிக்காக அனுப்பப்படுகிறோம் என்ற தெளிவு இல்லை.
இத்திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளை எழுதத்தொடங்கினால் அதை தனி பதிவாக எழுதவேண்டும். அப்படி இப்படி உருட்டி திட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். ஆக, பள்ளிகல்வித்துறையின் crucial data இப்போது என்.ஜி.ஓ. கையில். Contrary to TN CM Fellowship which is being executed by Bharathidasan Institute of Management, these school education dept programmes are mostly outsourced to NGOs and private companies, resulting in no capacity building within the department and perpetual dependence on the private entities. என்.ஜி.ஓ.க்கள் கெடுத்தது பத்தாதென்று தற்போது தனியார் commercial நிறுவனங்களும் கிளம்பியிருக்கிறார்கள் போல.
தேவைப்படும் மற்றொரு தகவல்: சில மாதங்களுக்கு முன்பு பள்ளிக்கல்வித்துறையின் master database ஆன, மாணவர்களின் சாதி முதல் வீட்டுமுகவரி வரை அனைத்தும் சேமிக்கப்படும் EMIS data விற்பனைக்கு வந்ததாக செய்திகளை பார்த்திருப்பீர்கள். அந்த குற்றச்சாட்டின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன ?
5 national kavi
Leave A Reply

Your email address will not be published.