அரசியலுக்கு விஷால் வருவாரா ? ரத்னம் ஹைலைட்ஸ் !

அவர் சொன்ன கதை நான் எதிர்பார்க்கவே இல்லை, ஒரு சர்ப்ரைஸ் இருந்தது. சுகுமார் அட்டகாசமாக விஷுவல்ஸ் தந்துள்ளார்.  ஹரி சார் என்றாலே உழைப்பு தான். அவர் சொன்னால் எது வேண்டுமானாலும் செய்யலாம் ...

0

அரசியலுக்கு விஷால் வருவாரா ? ரத்னம் ஹைலைட்ஸ் !

‘தாமிரபரணி’ மற்றும் ‘பூஜை’ சூப்பர் ஹிட் படங்களுக்கு பிறகு நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணைந்து பணியாற்ற, ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் இணைந்து தயாரிக்க, இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியன் மற்றும் கல்யான் சுப்பிரமணியம் இணைத் தயாரிப்பாளர்களாக பணியாற்ற, அதிரடி ஆக்ஷ‌ன் படமாக உருவாகியுள்ள  ‘ரத்னம்’ ஏப்ரல் 26 அன்று திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள ஏப்ரல் 18-அன்று மாலை சென்னையில் நடைபெற்றது.  நிகழ்ச்சியில் விஷாலின் தேவி பவுண்டேஷ‌ன் சார்பில் இரு பெண் குழந்தைகளுக்கு படிப்புக்கு உதவி செய்யப்பட்டது.

தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் பேசுகையில்.. “ஹரி சார் இயக்கத்துல விஷால் ஹீரோவா ஒரு படம் தயாரிப்போம்னு நினைக்கவே இல்லை.  இது எல்லாம் அமைஞ்சது எனக்கு கிடைத்த வரம் என்று தான் சொல்வேன். சந்தோஷத்தோடு பண்ணியிருக்கிற‌ படம் இது. தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் எல்லோருக்கும் நன்றி சொல்லிக்கிறேன். அடுத்த வாரம் படம் வருது, உங்கள் எல்லோருக்கும் இது பிடிக்கும்.  என் மாப்பிள்ளை கார்த்திக் சுப்புராஜ் மற்றும் என் குடும்பத்துக்கு என் நன்றிகள்.”

இன்வீனியோ ஆரிஜன் நிறுவனத்தின் சார்பில் அலங்கார் பாண்டியன் பேசுகையில், “ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் உடன் எங்களோட இரண்டாவது கூட்டணி இது. ‘ஜிகர்தண்டா 2’ அடுத்து இப்போ ‘ரத்னம்’. ஹரி சார் அவருடன் மீண்டும் இணைந்துள்ளார். இந்த படம் கண்டிப்பாக‌ பெரிய வெற்றியைக் கொடுக்கும் என்று நம்புறோம்.  அனைவருக்கும் நன்றி. “

- Advertisement -

- Advertisement -

ஜீ ஸ்டுடியோஸ் சார்பில் வினோத் சி.ஜே. பேசியதாவது … “விஷால் என்னுடைய 6 வருட கால நண்பர், அவருடன் படம் செய்ய வேண்டுமென  பேசிக்கொண்டிருந்தோம்,  அந்த நிலையில் தான் அவர் ஹரி சாரை அறிமுகப்படுத்தி படம் செய்யலாம் என்றார். இந்த மாதிரி ஒரு வெற்றிக்கூட்டணியில் இணைவது பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் இன்வீனியோ ஆரிஜன் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவம். இப்படத்தை கண்டிப்பாக ரசிகர்கள் கொண்டாடுவார்கள். அனைவருக்கும் நன்றி.

ஒளிப்பதிவாளர் எம் சுகுமார் பேசுகையில்.. ” ஹரி சார் இதுவரையில் இல்லாத வகையில் கடுமையாக உழைத்திருக்கிறார். சிங்கிள் ஷாட்டில் ஒரு விஷ‌யம் செய்துள்ளோம், பாருங்கள் பிடிக்கும். விஷால் சார் எப்போதும் எனர்ஜியாக எத்தனை டேக் போனாலும் அசராமல் செய்வார். விஜய் சாருக்கு பிறகு, விஷால் சாரிடம் தான் இவ்வளவு எனர்ஜியைப் பார்க்கிறேன் .படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும், நன்றி.”

ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் பேசுகையில்.. ” விஷால் கூட முதல் படம் ‘சண்டைக்கோழி’ இப்பவும் அவர் சண்டைக்கோழி தான். அவ்வளவு எனர்ஜி. இந்தப்படத்தில் ஒரே ஷாட்டில் ஒரு ஆக்சன் சீன் கேட்டார். அதற்காக ஒரு நாள் முழுக்க ரிகர்சல் பார்த்தோம், அவ்வளவு கஷ்டப்பட்டு உருவாக்கியுள்ளோம். ஹரி சார் படங்கள் பரபரப்பாக இருக்கும் இந்தப்படம் எல்லாப்படத்தையும் விட பரபரப்பாக இருக்கும்.”

4 bismi svs

நடன இயக்குநர் தினேஷ் பேசுகையில்..’ரத்னம்’ படத்தில் பணியாற்றியது மகிழ்ச்சி. எனக்கு இந்தப்படம் மிக அட்டகாடமாக வந்துள்ளது. படம் உங்களுக்கு பிடிக்கும், நன்றி.” பி வி ஆர் சார்பில் மீனா பேசுகையில், “விஷால் எப்போதும் உண்மையானவர், அடுத்தவருக்காக நிற்பார், அவருக்காக இங்கு இருப்பது மகிழ்ச்சி. இந்தப்படத்தில் பங்குகொள்வது மகிழ்ச்சி.”

நடிகர் சமுத்திரக்கனி பேசியது, “மகிழ்ச்சியான தருணம். இந்தப்படம் எனக்கு ஸ்பெஷல். ஹரி அண்ணன், தம்பி விஷால் எல்லாரும் நெருக்கமானவர்கள். ஹரி அண்ணனிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். உழைப்பு, உழைப்பு அயராத உழைப்பு. விஷால் என் தம்பி. தயாரிப்பாளர் கார்த்திக் அவர்களிடம் இருக்கும் உண்மை எனக்குப் பிடிக்கும். ஹரி அண்ணனும்  நானும் ஒரே ஸ்கூல். அவர் கூப்பிடார் வந்துவிட்டேன். விஷாலுடன் ஒரு வேலை நடந்து கொண்டிருக்கிறது, அது நடந்தால் பெரிதாக பேசப்படும். இந்தப்படம் தீ மாதிரி வேகமாக இருக்கும், அனைவருக்கும் பிடிக்கும், நன்றி.”

இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் பேசியதாவது … ‘ரத்னம்’ பட டீமிற்கு நன்றி. தேசிய விருது பாராட்டுகளுக்கு என் நன்றிகள். ஹரியூடன ‘ஆறு’ படத்தில் ஆரம்பித்து இப்போ 6வது படம். கதை எழுதி ஒரு படம் உருவாவது எல்லாமே ஒரு இயக்குநர் கையில் தான், அவரால் தான் நாங்கள் எல்லோரும் வேலை செய்கிறோம்.இசையமைப்பாளராக நான் ரொம்பவும் எஞ்சாய் செய்த படம் இது.ஹரி சார் ஸ்பீட் அவரது சிந்தனையிலேயே இருக்கிறது. விஷால் சார் இதில் கலக்கியிருக்கிறார். ப்ரியா பவானி சங்கர் நன்றாக நடித்துள்ளார். அனைவருக்கும் பிடித்த படமாக இப்படம் இருக்கும், நன்றி”.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசும் போது, “இப்படம் பெரிய வெற்றி பெறும். விஷால் சாருக்கு ஒரு வேண்டுகோள், மார்க் ஆண்டனி 100 கோடி அடுத்து 300 கோடி படம் தரனும், அரசியல் வேண்டாம், இதை வேண்டுகோளாக வைக்கிறேன். சமீபத்தில் தமிழ் சினிமாவில் வெற்றிப்படம் இல்லை என்ற வருத்தம் இருக்கிறது. அதை உடைத்து இந்தப்படம் பெரிய வசூலைக் குவிக்கும் படமாக அமைய வாழ்த்துகள்.

இயக்குநர் ஹரி பேசியதாவது … “இது எனது 17வது படம், விஷாலுடன் மூன்றாவது படம். விஷால் தயாரிப்பாளர் கார்த்திக்கை அறிமுகப்படுத்தினார். அந்த கம்பெனியில் கார்த்திக் சுப்புராஜ் இருந்தார். ஒரு இயக்குநர் இருக்கும் கம்பெனியில் வேலை பார்ப்பது சுவாரஸ்யமாக இருந்தது. இந்தப்படம் இந்தக்கால ஆடியன்ஸுக்கு பிடிக்கும் வலையில் 60% ஆக்சன் 40% கமர்ஷியலாக இருக்கும். விஷால் ஆக்ஷ‌ன் செய்வார், ஆனால் எமோஷனிலும் அசத்தியுள்ளார். எல்லா ஆர்டிஸ்டும் நன்றாக வேலை பார்த்துள்ளனர். சிங்கிள் ஷாட் பற்றி எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். ஒரே ஷாட்டில் எட்டு சீக்குவன்ஸ், நான்கு ஸ்டண்ட் மாஸ்டர்கள் செய்துள்ளனர். எனக்கு எதார்த்தம் இருக்கனும்னு ஆசைப்படுவேன், ஏன் வைத்தார் என யாரும் கேட்கக் கூடாது. அந்த எண்ணத்தில் தான் உழைத்து உருவாக்கியுள்ளோம்.  3.5  கிமீ தூரத்திற்கு நான்கு இடங்களில் மாறி மாறி ஹீரோ ஹீரோயினோடு போய் ஆக்ஷ‌ன் செய்துள்ளார், இது செய்யவே முடியாது என்றார்கள். வெற்றிமாறன், ரஞ்சித் எல்லாம் ராவாக தருகிறார்கள். அது மாதிரி செய்ய ஆசைப்பட்டேன். விஷால் உழைத்து தந்தார். அனைவரும் ஒத்துழைப்பு தந்தனர். ஒரு நாள் முழுக்க ரிகர்சல் பார்த்து மூன்றாவது ஷாட்டில் எடுத்து முடித்த போது தான் நிம்மதியாக இருந்தது.  ஆடியன்ஸை மதித்து படம் எடுத்துள்ளோம். பார்க்கும் போது உங்களுக்கு ஒரு புது அனுபவமாக இருக்கும். நன்றி.

நடிகர் யோகிபாபு பேசியதாவது, “ஹரி சாருடன் ‘யானை’ படத்தில் வேலை பார்க்கும் போது அவரது படங்களை பற்றி கேட்டுக்கொண்டே இருப்பேன். யோகி உழைப்பு தாண்டா ஜெயிக்கும் என்பார். அவர் இன்னும் நிறையப்படங்கள் செய்ய வேண்டும். விஷால் சார்  என்றும் மாறாதவர், அறிமுகமானதிலிருந்து இன்று வரை ஒரே மாதிரி பழகுகிறார். தேவி ஶ்ரீ பிரசாத் சார் என் மீது நிறைய அன்பு வைத்துள்ளார். சமுத்திரக்கனி அண்ணா எப்போதும் எனக்கு நல்லது நினைப்பவர். தயாரிப்பாளர் கார்த்திக் மற்றும் ஸ்டோன் பெஞ்சுக்கு நன்றி. எல்லோருக்கும் நன்றி.

நடிகர்  விஷால் பேசியது, “இந்த மேடையை அமைத்து தந்த உங்களுக்கும் என் நண்பர்களுக்கும் நன்றி. உங்களால் இந்தப் பயணம் சாத்தியமானது. ‘ரத்னம்’ பற்றி சொல்ல வேண்டும். ‘மார்க் ஆண்டனி’ எனக்கு புதிய கதவைத் திறந்தது, 100 கோடி வசூலால் மரியாதை கிடைத்துள்ளது. அந்தப்படம் ஆதிக்கிற்கு ஒரு வாழ்க்கையை தந்துள்ளது. ‘மார்க் ஆண்டனி’க்கு பிறகு, பழைய விஷாலை பார்க்க முடியவில்லை என்று சொன்ன போது, ஹரி சார் கூட படம் பண்ணலாம் என சொன்னார்கள். நானே அவருக்கு போன் பண்ணி நான் சார் நாம் படம் பண்ணலாம் என்றேன். ரொம்பவும் சந்தோஷப்பட்டார். மூன்றாவது படம் எனும் போது எல்லோரும் எதிர்பார்ப்பார்கள். அவர் சொன்ன கதை நான் எதிர்பார்க்கவே இல்லை, ஒரு சர்ப்ரைஸ் இருந்தது. சுகுமார் அட்டகாசமாக விஷுவல்ஸ் தந்துள்ளார்.  ஹரி சார் என்றாலே உழைப்பு தான். அவர் சொன்னால் எது வேண்டுமானாலும் செய்யலாம். அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நாங்கள் ஏன் இன்னொரு கொடியைத் தூக்கிக் கொண்டு அரசியலுக்கு வர வேண்டும். எனக்கு நல்ல சம்பளம் கிடைக்கிறது அதை விட்டுட்டு நான் ஏன் அரசியலுக்கு போகணும்? அவர்கள் வேலையை சரியாக செய்தால் நான் அரசியலுக்கு வர மாட்டேன். இந்தப்படம் ஹரி சாரின் உழைப்பு, அவர் யுனிவர்ஸில் நாங்கள் வேலை பார்த்துள்ளோம் உங்களுக்கு எண்டர்டெயினர் காத்திருக்கிறது, நன்றி”

மதுரை மாறன்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.